தேர்தலின்போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் உதவி தொகை… எம்.பி., கனிமொழி வழங்கினார்!

 

தேர்தலின்போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் உதவி தொகை… எம்.பி., கனிமொழி வழங்கினார்!

தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் தேர்தல் பணியின்போது விபத்தில் உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு, ரூ.15 லட்சம் நிவாரண தொகையை திமுக எம்.பி., கனிமொழி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கொம்மடிகொட்டை கிராம பள்ளி ஆசிரியர் சமுத்திரபாண்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கிய ரூ.15 லட்சம் இழப்பீட்டு தொகையை வழங்கும் நிகழ்ச்சி, சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தேர்தலின்போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் உதவி தொகை… எம்.பி., கனிமொழி வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு, ஆசிரியர் சமுத்திரபாண்டியின் மனைவி கங்காதேவி, அவரது மகன்கள் கதிர்காம வேல், கதிர்காமதுரை ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக அளித்த ரூ.2.60 லட்சத்துக்கான காசோலையையும் ஆசிரியர் சமுத்திர பாண்டியின் குடும்பத்தினருக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, தேர்தல் வட்டாட்சியர் ரகு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத் தலைவர் அந்தோனி ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.