புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் இத்தனை கோடி மது விற்பனையா?!

 

புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் இத்தனை கோடி மது விற்பனையா?!

புத்தாண்டு அன்று நடந்த டாஸ்மாக் விற்பனை விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் இரவு நேர கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், காலை சுற்றுலா தலங்கள் அனைத்திலும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக ஆண்டுதோறும் புத்தாண்டுக்கு மது விற்பனை களைகட்டும். புத்தாண்டுக்கு முன்தினமே, மது பிரியர்கள் மது வாங்கி வைத்துக் கொள்வர்.

புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் இத்தனை கோடி மது விற்பனையா?!

அந்த வகையில், கடந்த 31ம் தேதியன்று மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ரூ.9 கோடி அதிகமாக விற்பனை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று டாஸ்மாக்கில் ரூ.137 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே ரூ. ரூ.34.55 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.