வேடச்சந்தூரில் வடமாநில ஒப்பந்ததாரரிடம் ரூ.13.9 லட்சம் பறிமுதல்!

 

வேடச்சந்தூரில் வடமாநில ஒப்பந்ததாரரிடம் ரூ.13.9 லட்சம் பறிமுதல்!

திண்டுக்கல்

வேடச்சந்தூர் அருகே சாலை ஒப்பந்ததாரர் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துவந்த 13 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கல்வார்பட்டி சோதனைச் சாவடியில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற காரை மறித்து சோதனையிட்டனர்.

வேடச்சந்தூரில் வடமாநில ஒப்பந்ததாரரிடம் ரூ.13.9 லட்சம் பறிமுதல்!

இந்த சோதனையில், காரில் 13 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் அவுரங்காபாத்தை சேர்ந்த சாலை ஒப்பந்ததாரர் பிரியாசாமி என்பதும், அவரிடம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து, பறிமுதலான பணத்தை வேடசந்தூர் துணை வட்டாட்சியர் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.