நெல்லையில் கேஸ் ஏஜென்சி மேலாளரிடம், ரூ.12 லட்சம் பறிமுதல்!

 

நெல்லையில் கேஸ் ஏஜென்சி மேலாளரிடம், ரூ.12 லட்சம் பறிமுதல்!

நெல்லை

நெல்லை பாளையங்கோட்டையில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.12 லட்சம் ரொக்கப் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை திருநகர் பகுதியில் கூட்டுறவு சார் பதிவாளர் செல்வகுமார் தலைமையில், பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நெல்லையில் கேஸ் ஏஜென்சி மேலாளரிடம், ரூ.12 லட்சம் பறிமுதல்!

இந்த சோதனையில், வாகனத்தில் ரூ.12 லட்சத்து 17 ஆயிரத்து 400 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்த நபரிடம் விசாரித்த போது, அவர் தச்சநல்லூரை சேர்ந்த மகேஷ் என்பதும், பாளையங்கோட்டையில் கியாஸ் ஏஜென்சியில் மேலாளராக உள்ளதும் தெரியவந்தது.

பணத்தை வங்கியில் செலுத்த எடுத்துச் செல்வதாக அவர் கூறிய நிலையில், அதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால், மகேஷிடம் இருந்த ரூ.12 லட்சத்து 17 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.