நாயை கண்டுபிடித்து கொடுத்தவருக்கு ரூ.10000 சன்மானம் வழங்கிய உரிமையாளர்!

 

நாயை கண்டுபிடித்து கொடுத்தவருக்கு ரூ.10000 சன்மானம் வழங்கிய உரிமையாளர்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் தொலைந்துபோன நாயை கண்டு பிடித்து தந்தவருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

சென்னை மந்தைவெளியில் சேர்ந்தவர் சிவகுமார். தனியார் கம்பெனியில் முதன்மை ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சிவக்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர் செல்லமாக வளர்த்த நாயை வந்தவாசி அடுத்த கிழ்கொடுங்கலூர் கிராமத்தில் உள்ள உறவினரான பாலமுருகன் என்பவர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார் இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி அன்று வீட்டிலிருந்த நாய் திடீரென காணாமல் போனது. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மனவேதனை அடைந்த சிவக்குமார் நாயைக் காணவில்லை என்றும் நாயை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கீழ்கொடுங்கலூர் சுற்றியுள்ள 20 கிராமங்களில் சுவரொட்டி விளம்பரம் ஒட்டி உள்ளார்.

நாயை கண்டுபிடித்து கொடுத்தவருக்கு ரூ.10000 சன்மானம் வழங்கிய உரிமையாளர்!

இந்த நிலையில் நாயைக் காணவில்லை என்று சுவரொட்டி விளம்பரத்தை பலர் பார்த்துச் சென்றனர். ஸ்ரீதர் என்பவர் வந்தவாசி அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமம் ஏரி அருகே நாய் இருப்பதை பார்த்து மீட்டெடுத்து நாயின் உரிமையாளர் சிவகுமாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நாயை மீட்டெடுத்து ஒப்படைத்த ஸ்ரீதரிடம் சிவக்குமார் பத்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்கினார்.