பொதுமுடக்கம் நீடிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1000 நிவாரணத்தொகை வீடு தேடி வரும்- முதல்வர்

 

பொதுமுடக்கம் நீடிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1000 நிவாரணத்தொகை வீடு தேடி வரும்- முதல்வர்

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வகை வைரஸில் இருந்து மக்களை காக்க 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் 6 ஆம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதாவது வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அந்த 4 மாவட்டங்களிலும் பொதுமுடக்கம் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமுடக்கம் நீடிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1000 நிவாரணத்தொகை வீடு தேடி வரும்- முதல்வர்

அதனால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதகவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அம்மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடை அட்டைதாரர்களின் வீடு தேடி வந்து 22 ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை கொடுக்க உத்தரவிட்டுள்ளதாக என்று முதல்வர் அறிவித்துள்ளார்.