சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் நடிகர் ரஜினிக்கு ரூ. 100 அபராதம்!

 

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் நடிகர் ரஜினிக்கு ரூ. 100 அபராதம்!

போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்றபோது போலீசார் அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்தபடி கார் ஓட்டுவது போன்ற புகைப்படம் ஒன்று கடந்த 20-ம் தேதி வைரலானது. அவர் எங்கு சென்றார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகன், பேரனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரஜினிகாந்த் பதிலளித்தார். இதையடுத்து ரஜினிகாந்த் முறையாக இ-பாஸ் பெற்று தான் கேளம்பாக்கத்துக்குச் சென்றாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா என ஆய்வு செய்து பின்னர் தெரிவிக்கப்படும்” என்றார். இந்நிலையில் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு செல்வதற்கு இ-பாஸ் எடுத்தது உறுதியானது.

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் நடிகர் ரஜினிக்கு ரூ. 100 அபராதம்!
இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்றபோது சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் நடிகர் ரஜினிக்கு ரூ. 100 அபராதம் விதித்து தாழம்பூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜூன் 26 ஆம் தேதி அபராதம் செலுத்தியதற்கான ரசீது விவரங்கள் வெளியானது.