கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

 

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நேற்று இரவு துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு 190 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 120 பேர் லேசான காயங்களுடனும் 20 பேர் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கேரளாவையே கலங்கச் செய்துள்ளது. இன்று காலை உயிர் தப்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அவர்களுள் ஒருவருக்கு கொரோனா உறுதியானது.

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

அதனால் விமானத்தில் பயணித்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்த கறுப்புப்பெட்டி கைப்பற்றப்பட்டு விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களுக்கு ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் என்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.