விஷவாயு தாக்கி பலியான 3 துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி

 

விஷவாயு தாக்கி பலியான 3 துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் வெங்கடேஸ்வரா உணவு நிறுவனத்தில் இருக்கும் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்திய 3 துப்புரவு பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் காட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ( 41), பாக்கியராஜ் (40) மற்றும் அமரம்பேடு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (45) ஆகியோர் என்பது தெரியவந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஷவாயு தாக்கி பலியான 3 துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி

இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.