எளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்!
Jul 15, 2020, 08:22 IST1594781534000
எளாவூர் சோதனைச்சாவடியில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி பணத்தை எடுத்து வந்த 3 பேரிடம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்த சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரணையை துவங்கியுள்ளனர்.