ரூ.1 கோடி நிதி : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்!

 

ரூ.1 கோடி நிதி :  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்!

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூபாய் ஒரு கோடி நிதி தலைமை செயலாளரிடம் வழங்கப்பட்டது.

ரூ.1 கோடி நிதி :  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்!

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொரோனா கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும் , உரிய நிவாரணங்களை வழங்கவும் அதிமுக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்திருந்தார்கள்.

அதனடிப்படையில் இன்று அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முன்னாள் அமைச்சரும் , கழக வழிபாட்டு குழு உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளரும், வடசென்னை தெற்கு (கிழக்கு )மாவட்ட கழக செயலாளர் ஜெயக்குமார், கழக வழிகாட்டு குழு உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளரும் ,கழக செய்தி தொடர்பாளருமான ஜேசிடி பிரபாகர், முன்னாள் தலைவரும் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ஆன பாலகங்கா ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.