பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி…சிக்கிய அதிமுக வேட்பாளர்!!

 

பதுக்கி வைத்திருந்த  ரூ.1 கோடி…சிக்கிய அதிமுக வேட்பாளர்!!

அதிமுக வேட்பாளரின் ஊழியர் வீட்டில் ஒரு கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதுக்கி வைத்திருந்த  ரூ.1 கோடி…சிக்கிய அதிமுக வேட்பாளர்!!

திருச்சி மணப்பாறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர். இவர் அப்பகுதியில் தீவிர பரப்புரை செய்து வருகிறார் . அத்துடன் சந்திரசேகர் வாக்குக்காக பணம் பட்டுவாடா செய்ய பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த சோதனையில் சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுனராக பணியாற்றும் வலசு பட்டியை சேர்ந்த அழகர்சாமி வீட்டில் ஒரு கோடியை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர்.

பதுக்கி வைத்திருந்த  ரூ.1 கோடி…சிக்கிய அதிமுக வேட்பாளர்!!

அதைப்போல அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் ,ஆனந்த் அவர்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் . வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணத்தை தனது வீட்டில் வைக்காமல் ஊழியர்களின் வீட்டில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.