திருப்பூரில் உரிய ஆவணமில்லாத ரூ.1.11 கோடி பறிமுதல்!

 

திருப்பூரில் உரிய ஆவணமில்லாத ரூ.1.11 கோடி பறிமுதல்!

திருப்பூர்

திருப்பூரில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 1 கோடியே 11 லட்சம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், காரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

திருப்பூரில் உரிய ஆவணமில்லாத ரூ.1.11 கோடி பறிமுதல்!

இதுகுறித்து வாகனத்தில் வந்த நபர்களிடம் விசாரித்தபோது, இது பிரபல நகைக்கடைக்கு சொந்தமான பணம் என்பதும், தனியார் நிறுவனம் மூலம் வங்கியில் செலுத்த எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. ஆனால் அவர்களிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, அந்த பணம் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. அதில் உரிய ஆணவங்கள் இல்லாதது தெரியவந்ததால் பணம் கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.