சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.10 கோடி வசூல்!

 

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.10 கோடி வசூல்!

திருச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ 294 கிராம் தங்கம் உள்ளிட்டவை கிடைக்கப் பெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில், புகழ்பெற்ற சக்தி ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் இரு முறை திறக்கப்பட்டு, எண்ணப்படுகிறது.

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.10 கோடி வசூல்!

இதன்படி, நடப்பு மாதம் 2-வது முறையாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணி கோயில் இணை ஆணையர் கல்யாணி, உறையூர் வெக்காளி அம்மன் கோயில் உதவி ஆணையர் ஞானசேகரன், திருவானைகோயில் அகிலாண்டேஸ்வரி கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கோவில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 10 லட்சத்து 61 ஆயிரத்து 134 ரூபாய் ரொக்கப் பணம் வசூலானது. மேலும், 2 கிலோ 294 தங்கம், 3 கிலோ 829 கிராம் வெள்ளி மற்றும் ஏராளமான வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.