அந்தியூர் அருகே உரிய ஆவணமில்லாத ரூ.1.03 லட்சம் பறிமுதல்!

 

அந்தியூர் அருகே உரிய ஆவணமில்லாத ரூ.1.03 லட்சம் பறிமுதல்!

ஈரோடு

அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் கிட்டம்பட்டி பகுதியில் இன்று தேர்தல் நிலைக்குழு அலுவலர் வீரக்குமார் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தியூர் அருகே உரிய ஆவணமில்லாத ரூ.1.03 லட்சம் பறிமுதல்!

அப்போது, கோவை கருமத்தம்பட்டியில் இருந்து செங்கல் லோடு இறக்கிவிட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில், கொளத்தூர் லக்கம்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுனர் தேவராஜிடம் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் நிலைக்குழு அதிகாரிகள், அதனை அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர்.