ஐபிஎல் 2020: தேவாட்டியா மற்றும் பராக்கின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி வெற்றி!

 

ஐபிஎல் 2020: தேவாட்டியா மற்றும் பராக்கின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி வெற்றி!

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தின் முதல்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் ஆடி நான்கில் வென்றிருக்கிறது. ராஜஸ்தான் ராயல் அணி இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி, இரண்டில் மட்டுமே வென்றிருக்கிறது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, வார்னரும் பேர்ஸ்டோவும் களமிறங்கினர். அதிகபட்சமாக வார்னர் 48 ரன்களும், பேர்ஸ்டோ 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக மணிஷ் பாண்டே 54 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்த ஹைதராபாத் அணி, 158 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஐபிஎல் 2020: தேவாட்டியா மற்றும் பராக்கின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி வெற்றி!

இதனையடுத்து களமிறங்கிய, ராஜஸ்தான் ராயல் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லரும், பென் ஸ்டோக்கும் இறங்கினர். இதில் பட்லர் 16 ரன்களும், பென் ஸ்டோக் 5 ரன்களும் மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக ராகுல் 45 ரன்களும், ரியான் பராக் 42 ரன்களும் எடுத்தனர். 12 ஓவர் முடிவில் 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால் ராஜஸ்தான் அணி தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேவாட்டியா மற்றும் பராக் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் ராயல் அணி, 163 ரன்கள் பெற்று வெற்றிவாகை சூடியது.