கம்மலை மாற்றுவதுபோல் காதலனை மாற்றிய பெண் ரௌடி-கடுப்பான முன்னாள் காதலன் நடுரோட்டிலேயே செஞ்ச வேலைய பாருங்க..

 

கம்மலை மாற்றுவதுபோல் காதலனை மாற்றிய பெண் ரௌடி-கடுப்பான முன்னாள் காதலன் நடுரோட்டிலேயே செஞ்ச வேலைய பாருங்க..

ரௌடிகளுக்குள் மோதல் வந்து பார்த்திருக்கிறோம் .காதல் வந்து பார்த்திருக்கிறீர்களா ?..ஆமாங்க ஒரு பெண் ரௌடிக்கு இன்னொரு ரௌடியோடு காதல் வந்து,அந்த காதலால் நடந்த ஒரு மோதலால் சூரத் நகர் பரபரப்பானது.
குஜராத்தின் சூரத்தில் இருக்கும் 22 வயதான ‘லேடி டான்’ அஸ்மிதாபா கோஹில் மீது பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன .அவரருக்கு அங்குள்ள கடைக்காரர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை கப்பம் கட்டுகிறார்கள் .அவர் என்னதான் ரௌடியாக பெண் தாதாவாக இருந்தாலும் அவரும் பெண் தானே! அவருக்கும் காதல் உணர்வுகள் இருக்குமல்லவா ?.ஆமாங்க அவர் சஞ்சய் வாகேல் என்பவரை காதலித்து வந்தார் .அவரும் ஒரு கேங்ஸ்டர் தான் .இருவரின் காதல் அந்த பகுதி முழுவதும் அனைவருக்கும் தெரியும் .

கம்மலை மாற்றுவதுபோல் காதலனை மாற்றிய பெண் ரௌடி-கடுப்பான முன்னாள் காதலன் நடுரோட்டிலேயே செஞ்ச வேலைய பாருங்க..
இந்நிலையில் கோஹில் திடீரென சஞ்சய் குழுவில் இருக்கும் ராகுல் மீது காதல் கொண்டார் .இருவரும் ஒன்றாக சஞ்சய்க்கு தெரியாமல் சுற்றி வந்தார்கள் .ஒரு நாள் யாரோ சஞ்சயிடம் இந்த விஷயத்தை போட்டுக்கொடுத்து விட்டார்கள் .இதனால் கடுப்பான சஞ்சய் நேராக கோஹிலை நடுரோட்டிலேயே அவரின் செல்வாக்கு கொடிபறக்கும் பகுதியில் அவரின் கன்னத்தில் பளார் ,பளார் என அறைந்தார் .மேலும் அவரின் வாகனங்கள் ,பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தினார் .அவரின் வீட்டு கதவை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்
இதனால் கோஹில் மிகவும் அதிர்ச்சியடைந்து ,ராகுலின் வீட்டுக்குள் சென்று அன்று இரவு முழுவதும் ஒளிந்து கொண்டார் .மறுநாள் கோஹில் நேராக காவல் நிலையம் சென்று சஞ்சய் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .