“என் கூடவே இருந்துட்டு என்னையே காட்டி குடுத்திட்டீங்களே “பரோலில் வந்து ,பார்ட்டி கொடுத்து சாட்சிகளை சுட்டு கொன்ற ரௌடி..

 

“என் கூடவே இருந்துட்டு என்னையே காட்டி குடுத்திட்டீங்களே “பரோலில்  வந்து ,பார்ட்டி கொடுத்து சாட்சிகளை சுட்டு கொன்ற ரௌடி..

டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள ஒரு வனப்பகுதியில் பரோலில் வந்த ஒரு ரௌடி தன்னுடைய நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார் .அதற்காக அந்த ரௌடி தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து ,பரோலில் நான் வெளியே வந்ததை கொண்டாட விரும்புறேன் எல்லோரும் வாங்க”அப்படின்னு கூப்பிட்டார் .இதை நம்பி அவரின் நண்பர்கள் ஆறு பேர் புதன்கிழமை இரவு 9 மணியளவில் நல்லா பகுதியின் ஒரு காட்டில் ஒன்று கூடினார்கள் .அந்த ஆறு பேரில் இரண்டு பேர் அந்த ரௌடிக்கெதிராக போட்டு கொடுத்தவர்கள் .
ரௌடி வைத்த பார்ட்டியின் போது குடி போதையின் உச்சத்தில் அனைவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது .அப்போது அந்த ரௌடி தனது துப்பாக்கியை எடுத்து , இரண்டு பேரை சுட்டு கொன்றார் .

“என் கூடவே இருந்துட்டு என்னையே காட்டி குடுத்திட்டீங்களே “பரோலில்  வந்து ,பார்ட்டி கொடுத்து சாட்சிகளை சுட்டு கொன்ற ரௌடி..

பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள் .துப்பாக்கி சத்தம் கேட்டதால் அங்கிருந்த சிலர் போலீசுக்கு தகவல் சொன்னதும் விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இருந்த இருவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள் .இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து ,போலீசார் விசாரித்த போது இறந்த நபர் கீதா காலனியில் வசிக்கும் அப்துல் அலி என கண்டறியப்பட்டது .இவர் மீது ஒன்பதுக்கு மேற்பட்ட கிரிமினல் வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது .

“என் கூடவே இருந்துட்டு என்னையே காட்டி குடுத்திட்டீங்களே “பரோலில்  வந்து ,பார்ட்டி கொடுத்து சாட்சிகளை சுட்டு கொன்ற ரௌடி..
இந்த கொலை தொடர்பாக பஜான்புராவின் யமுனா விஹாரில் வசிக்கும் விபின் பலியன் கைது செய்யப்பட்டார். மேலும் டெல்லியில் உள்ள கஜூரி காஸில் வசிக்கும் சதேந்தர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.