‘தார்பாயில் கட்டி ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்’.. பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!

 

‘தார்பாயில் கட்டி ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்’.. பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!

திருவாரூர் மாவட்டம் பெரிய மில் தெரு பகுதியில் வசித்து வந்த கராத்தே மாரிமுத்து மீது கொலை உட்படப் பல வழக்குகள் திருவாரூர் காவல் நிலையத்தில் பதிவாகி இருந்தது. வழிப்பறி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இவர் 7 ஆம் தேதி பிணையில் வெளியே வந்த நிலையில், நேற்று திருவாரூர் ரயில் நிலையத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரிமுத்துடன் பிணையில் வெளியே வந்த மணி என்பவரிடம் விசாரணை செய்தனர்.

‘தார்பாயில் கட்டி ரயில் நிலையத்தில் கிடந்த சடலம்’.. பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!

அப்போது மணி அளித்த தகவல்கள் போலீசாரை திடுக்கிடச் செய்துள்ளது. பிணையில் வெளியே வந்த மாரிமுத்துவையும் மணியையும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் காரில் திருவாரூர் அழைத்துச் சென்று மரிமுத்துவை கொலை செய்ததாகவும் பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க தார்பாயில் சடலத்தை போட்டு திருவாரூர் ரயில் நிலையத்தில் வீசி விட்டதாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் வினோத் மற்றும் அவரது நண்பர்களுடன் அடிக்கடி மாரிமுத்துவிற்கு தகராறு வந்து கொண்டே இருந்ததால் அவரை பழிவாங்கப் பிணையில் வெளியே எடுத்து கொலை செய்ததாகவும் கூறினார்.

மணியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வினோத்தைக் கைது செய்த போலீசார் அவரது நண்பர்கள் 9 பேரைத் தேடி வருகின்றனர். முன் விரோதத்தால் நண்பர்களே மாரிமுத்துவை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.