சென்னையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

 

சென்னையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டிய ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர்.

சென்னையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார் ஆய்வாளர் நடராஜன். என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சங்கர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. சுட்டுக்கொல்லப்பட்ட சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சங்கர் வெட்டியதால் படு காயமடைந்த காவலர் முபாரக்கிற்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

தூத்துக்குடி 18ல் ரவுடி ஒருவரால் காவலர் சுப்ரமணி வெடிகுண்டு வீச்சில் இறந்த நிலையில் ரவுடிகளால் மேலும் ஒரு காவலர் உயிரை இழக்காமல் தடுக்கவே சங்கரை என்கவுண்டரில் போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளது.