பிரபல ரவுடி சிடி மணி கைது!

 

பிரபல ரவுடி சிடி மணி கைது!

சென்னையில் பிரபல ரவுடி மணிகண்டன் என்ற சிடி மணி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல ரவுடி சிடி மணி கைது!

தமிழகத்தில் சில ஆண்டுகளாகவே துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி விட்டது. போலீசாரை கூட வெடிகுண்டு வீசி கொலை செய்யும் அளவிற்கு இங்கு ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி மீது 30ற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தி.நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்த குற்றவழக்குகளில் சிக்க போலீசார் மத்தியில் சிடி மணி என்ற பெயர் பிரபலமானது. திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல தாதா ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட அவர் மறைவுக்கு பிறகு இவர் தலைமையில் புதிய டீம் உருவானது. கொலை வழக்குகள், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகளில் அவர் ஏற்கனவே 3முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சிடி மணியை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் கம்ரூதின், ஜான்சன், பிரசாந்த், ராஜசேகர் ஆகியோர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் தேனாம்பேட்டையில் பைக்கில் வந்து, சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகிய இரு ரவுடிகள் மீது குண்டு வீசியவர்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் பிரபல ரவுடி மணிகண்டன் என்ற சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.