ஶ்ரீரங்கத்தில் மாயமான ரவுடி அடித்துக் கொலை – நண்பர்களே கொன்று புதைத்தது அம்பலம்!

 

ஶ்ரீரங்கத்தில் மாயமான ரவுடி அடித்துக் கொலை – நண்பர்களே கொன்று புதைத்தது அம்பலம்!

திருச்சி

ஶ்ரீரங்கத்தில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடியை அடித்துக்கொன்று, சடலம் கொள்ளிடம் ஆற்றில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சங்கர் நகரை சேர்ந்தவர் நவீன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி நவீன் திடீரென மாயமாகினார். இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து, நவீனின் நண்பர்கள் தெப்பக்குளத்தை சேர்ந்த சந்திரமோகன், வடக்குவாசலை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை கொண்டனர்.

ஶ்ரீரங்கத்தில் மாயமான ரவுடி அடித்துக் கொலை – நண்பர்களே கொன்று புதைத்தது அம்பலம்!

அதில், கடந்த 8ஆம் தேதி நவீன், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் மது அருந்தி உள்ளார். அப்போது, நவீனுக்கும், அவரது நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், அவர்கள் நவீனை அடித்துக் கொன்று கொள்ளிடம் ஆற்றின் கரையில் புதைத்து தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, நேற்று ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியார் முன்னிலையில் போலீசார் உடலை தோண்டி எடுத்து அங்கேயே, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.