அதிமுகவில் இணைய தயார்! டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா அறிவிப்பு

 

அதிமுகவில் இணைய தயார்! டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா அறிவிப்பு

டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகர் பகுதியில் வசித்து வரும் இவர் டிக்டாக்கில் செய்த அட்டூழியத்தால் மிக விரைவில் பிரபலமானார். டிக் டாக்கில் சினிமா வசனம், நடனம் என்பதைத் தாண்டி ஆபாசம், கவர்ச்சி என பிரபலமான இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். சிங்கப்பூரில் சிறிதுகாலம் வேலைக்கு திரும்பிய இவர், திருச்சியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதற்காக இவர் சமீபத்தில் திருச்சி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒருசில நாட்களில் வெளியில் வந்த இவர், தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்றும்,ஸ்பா மையத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் ரவுடி பேபி சூர்யா மறுப்பு தெரிவித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டார்.

அதிமுகவில் இணைய தயார்! டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா அறிவிப்பு

இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா, “அதிமுகவில் நான் இணைய தயார்” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ள சூர்யா, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. நான் கட்சியில் இணைய தயார். என்னிடமும் அதிமுக உறுப்பினர் அட்டை உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் யாருப்பா அதிமுகவில் இருக்கிறீர்கள். அவர்கள் என்னை கூப்பிடுங்கள். நான் அரசியலில் குதிக்கவும், பிரச்சாரத்துக்கும் தயார்” என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=eZ7y4UEUNTk