‘ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரர்’ : கடையை சூறையாடிய ரவுடி கைது!

 

‘ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரர்’ : கடையை சூறையாடிய ரவுடி கைது!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இருக்கும் தென்கரை பகுதியில் வசித்து வரும் செந்தில் குமார், தனது வீட்டின் முன்பக்கமாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த புதன்கிழமை வந்த ரவுடி கும்பல், சிகரெட் வாங்கிக் கொண்டு காசு கொடுக்காமல் அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளனர். அவர்களிடம் செந்தில் குமார் காசு கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், பெட்டிக் கடையை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

‘ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரர்’ : கடையை சூறையாடிய ரவுடி கைது!

அதுமட்டுமில்லாமல், செந்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக செந்தில் குமார், அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த ரவுடி கும்பலின் தலைவனான வன்னி(30) என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும், அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் செந்தில்குமாரிடம் பணத்தை ஒப்படைத்துள்ளனர். 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், பிறரை போலீசார் தேடி வருகின்றனர். ஓசி சிகரெட்டால் ஏற்பட்ட இந்த தகராறால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.