பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

 

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி கோழி அருள் சென்னை அம்பத்தூரில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் அருள். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக நெல்லை போலீசார் தெரிவிக்கின்றனர். அம்பத்தூரில் பதுங்கிருந்த கோழி அருளை நெல்லை தனிப்படை போலீஸ் அம்பத்தூர் போலீசுடன் இணைந்து கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் நாடார் சமுதாயத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். கண்ணனை கொன்றவரை பழிவாங்குவேன் என ரவுடி கோழி அருள், வீடியோ பதிவிட்டிருந்தார்.

முன்னதாக நெல்லையில் 10 தனிப்படை போலீசார் நடத்திய வேட்டையில் ஒரே நாளில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.