விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை!

 

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை!

விழுப்புரம்

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அப்போது, அங்கு பணிபுரிந்த நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவருடன், மணிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை!

40 நாட்கள் கருவுற்ற நிலையில் இருந்த சவிதாவுக்கு, கடந்த வாரம் கரு கலைந்துள்ளது. இதன் காரணமாக, மணிக்கும் – சவிதாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தம்பதியினர் இருவரும், கடந்த புதன்கிழமை இரவு, வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பத்தினர் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, அவர்கள் இருவரும் தூக்கில் சடலமாக தொங்கினர்.

இதுகுறித்து மணியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணி, சவிதா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.