தோனி ஒரு ‘மாஸ்டர்’- ரோஹித் சர்மா புகழாரம்

 

தோனி ஒரு ‘மாஸ்டர்’- ரோஹித் சர்மா புகழாரம்

தல, கூல் கேப்டன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். சுதந்திரதின கொண்டாட்டத்தில் திளைத்திருந்த இந்திய மக்களுக்கு தோனியின் அறிவிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியது. தோனியை தொடர்ந்து ‘சின்ன தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். தோனியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தும் அவர் குறித்து புகழாரம் சூட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய கிரிக்கெட் வரலாற்றில் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவர் தோனி. கைதட்டல், கையொப்பம் என கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அணியை எவ்வாறு கட்டமைப்பது என்பதில் அவர் ஒரு மாஸ்டர். அவரை நீல நிறத்தில் மிஸ் செய்வோம். ஆனால் மஞ்சள் நிறத்தில் நம்முடன் இருப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.