அரசு அதிகாரி வீட்டில் கைவரிசை: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

 

அரசு அதிகாரி வீட்டில் கைவரிசை: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

வேலூரில் அரசு அதிகாரி ஒருவர் வீட்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணமும், 5 சவரன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் பெருமுகை பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ். இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார். ராஜேஷ் தனது இல்ல நிகழ்விற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அங்கேயே இருந்ததால், பெருமுகையில் இருக்கும் அவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது.

அரசு அதிகாரி வீட்டில் கைவரிசை: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், ராஜீவ் வீட்டில் கைவரிசையைக் காட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் இருந்து வீடு திரும்பிய ராஜேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்க்கையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணமும் 5 சவரன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதோடு அவரது லாப்டாப்பை யும் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அப்பகுதி காவல்நிலையத்தில் ராஜீவ் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.