“நாயை வெட்டி.. பெண்களின் கழுத்தில் கத்தி வைத்து”.. தீரன் பட பாணியில் நடந்த கொள்ளை!

 

“நாயை வெட்டி.. பெண்களின் கழுத்தில் கத்தி வைத்து”.. தீரன் பட பாணியில் நடந்த கொள்ளை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பல தளர்வுகளை அளித்துள்ளது. அதனால் ஒரு நாளைக்கு 400 முதல் 600 வரை இருந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது நாளொன்றுக்கு 2000 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் முடிந்த வரை பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனிடையே இந்த ஊரடங்கில் பல கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

“நாயை வெட்டி.. பெண்களின் கழுத்தில் கத்தி வைத்து”.. தீரன் பட பாணியில் நடந்த கொள்ளை!

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தாளையம் அருகே தீரன் பட பாணியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் வாயி்ற்கதவை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு குரைத்துக் கொண்டிருந்த நாயை அறிவாளால் வெட்டி விட்டு, வீட்டில் இருந்த பெண்களிடம் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த 20 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.