பைனான்சியர் வீட்டில் கத்தி முனையில் கொள்ளை – 5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு!

 

பைனான்சியர் வீட்டில் கத்தி முனையில் கொள்ளை –  5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு!

சென்னை அருகே, அம்பத்தூரில் பைனான்சியர் வீட்டில் கத்தி முனையில் பணம், செல்போன் கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீஸ் தேடி வருகிறது.

பைனான்சியர் வீட்டில் கத்தி முனையில் கொள்ளை –  5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு!

அம்பத்தூர் அடுத்த, பாடி முகப்பேர் சாலையில் வசிப்பவர் சரவணன். அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

பைனான்சியர் வீட்டில் கத்தி முனையில் கொள்ளை –  5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு!

இந்த நிலையில்,அவரது வீட்டில் நுழைந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரவணன் எங்கே என கேட்டு மிரட்டியுள்ளது. அப்போது, சரவணன் வீட்டில் இல்லாத நிலையில், அங்கிருந்த அவரது உறவினர் பாலகிருஷ்ணனை அந்த கும்பல் தாக்கியுள்ளது. அவரை மிரட்டி பீரோவில் இருந்த இருந்த 40 ஆயிரம் 4 செல்போனை எடுத்துக் கொண்டு சென்றுள்ளது.

பைனான்சியர் வீட்டில் கத்தி முனையில் கொள்ளை –  5 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு!

கத்தியால் தாக்கியதில், பாலகிருஷ்ணனுக்கு உதடு,தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.