“அம்மாவை அடித்து ,பெண்ணை பிடித்து” -பணத்தை எடுக்க வந்த கொள்ளையர்கள் பண்ண வேலை.

 

“அம்மாவை அடித்து ,பெண்ணை பிடித்து” -பணத்தை எடுக்க வந்த கொள்ளையர்கள் பண்ண வேலை.


ஒரு பங்களாவில் தனியே நகை ,பணத்துடன் வசித்து வந்த ஒரு தாயையும் மகளையும் வீட்டிற்க்குள் புகுந்த கொள்ளையர்கள் கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .

“அம்மாவை அடித்து ,பெண்ணை பிடித்து” -பணத்தை எடுக்க வந்த கொள்ளையர்கள் பண்ண வேலை.

உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் உள்ள ஹாஜிபூரில் ஒரு தாயும் மகளும் தனியே வசித்து வந்துள்ளார்கள் .அவர்கள் வீட்டிலேயே நிறைய நகை மற்றும் பணத்தை வைத்துக்கொண்டு வசித்து வந்துள்ளார்கள் .இந்த விஷயம் அந்த கிராமத்து மக்களுக்கும் தெரியும் .இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த வீட்டிற்குள் கடந்த புதன் கிழமையன்று இரவு நுழைந்துள்ளார்கள் .
அதன் பிறகு அவர்கள், அந்த வீட்டில் தாயும் மகளும் நன்றாக தூங்குவதை கவனித்து வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை மூட்டை கட்டினார்கள் .பிறகு அவர்கள் பணத்தை கொள்ளையடித்து கொண்டு புறப்படும்போது அந்த தாயும் மகளும் தூக்கத்திலிருந்து எந்திரிச்சி அந்த கொள்ளையர்களை தடுக்க முயன்றனர் .அப்போது அந்த கொள்ளையர்கள் அந்த இரு பெண்களையும் அடித்து உதைத்து கட்டையால் தாக்கினார்கள் .இதனால் அந்த தாய் அங்கேயே உயிரிழந்தார் ,அவரின் மகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார் .பிறகு அந்த வீட்டில் நடந்து கொள்ளை பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து கொள்ளையர்கள் பிடிக்க முயன்றது .ஆனால் அதற்குள் அவர்கள் தப்பியோடிவிட்டதில் போலீசில் புகாரளிக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்

“அம்மாவை அடித்து ,பெண்ணை பிடித்து” -பணத்தை எடுக்க வந்த கொள்ளையர்கள் பண்ண வேலை.