சாலையோரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 பெண்கள் கவலைக்கிடம்!

 

சாலையோரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 பெண்கள் கவலைக்கிடம்!

திருத்தணி அருகே கட்டுப்பாட்டை இந்த பேருந்து நிலைதடுமாறி குப்புற கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருகே ஆயத்த ஆடை தயார் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில், திருத்தணியை சேர்ந்த பல பெண்கள் இயங்கி வருகின்றனர். இன்று வழக்கம் போல அங்கு பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு திருத்தணியை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. பேருந்து பொன்பாடி டோல்கேட்டுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, லேசான மழை பெய்த நிலையில் எதிரே வந்த லாரி ஒன்று மோதுவது போல வந்துள்ளது.

சாலையோரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 பெண்கள் கவலைக்கிடம்!

இதனை உணர்ந்த ஓட்டுநர், லாரி மேல் மோதாமல் இருக்க பேருந்தை வேறு பக்கம் திரும்பியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்து குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில், 3 பெண்கள் கவலைக்கிடமாக நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.