சாலை விதிமீறல் – திண்டுக்கலில் ஒரே நாளில் 2,092 வழக்குகள் பதிவு

 

சாலை விதிமீறல் – திண்டுக்கலில் ஒரே நாளில் 2,092 வழக்குகள் பதிவு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதாக வாகன ஓட்டிகள் மீது 2 ஆயிரத்து 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் மாவட்டம் முழுவதும் விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்தனர். அதன்படி, தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 745 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 731 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

சாலை விதிமீறல் – திண்டுக்கலில் ஒரே நாளில் 2,092 வழக்குகள் பதிவு

மேலும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 125 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் உட்காரும் நபர், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 174 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

அதேபோல், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 241 வழக்குகளும், அதிவேகத்தில் சென்றதற்காக 19 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 56 வழக்குகளும் மற்றும் மது அருந்தி வாகனத்தை இயக்கியதற்காக ஒரு வழக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 92 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.