R(oad) S(ide) பாரதி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்- ஹெச். ராஜா

 

R(oad) S(ide) பாரதி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்- ஹெச். ராஜா

கடந்த 15 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டைஅன்பகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி,  “கண்ட கண்ட நாயெல்லாம் திமுகவைப் பற்றி பேசுகிறது. எச். ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம் இருக்கிறது.

கடந்த 15 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டைஅன்பகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆர்.எஸ்.பாரதி,  “கண்ட கண்ட நாயெல்லாம் திமுகவைப் பற்றி பேசுகிறது. எச். ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம் இருக்கிறது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு  உயர் நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது,டிவி சேனல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது” என பேசியிருந்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “நான் என்னைப்பற்றி பேசினால் எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் R(oad) S(ide) பாரதி தலித் சமுதாயத்தை கொச்சை படுத்தியது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.தொடர் தர்ணா போராட்டம் நடத்த தலித் சகோதரர்கள் வற்புறுத்துகின்றனர்” என பதிவிட்டுள்ளார்.