‘திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருமாறு’ துணை முதல்வரிடம் ஆர்.கே செல்வமணி மனு!

 

‘திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருமாறு’ துணை முதல்வரிடம் ஆர்.கே செல்வமணி மனு!

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்த ஆர்.கே செல்வமணி, திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தருமாறு மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, மக்கள் அதிகமாக கூடும் தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்பட்டது. இதை தொடர்ந்து மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும், பட பிடிப்புக்கு பல மாதங்களாக அனுமதிக்கப்படவில்லை.

‘திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருமாறு’ துணை முதல்வரிடம் ஆர்.கே செல்வமணி மனு!

இதனால் திரைப்பட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உதவிக் கரம் நீட்டினர். இதனையடுத்து, படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கியதன் படி சின்னத் திரை மற்றும் வெள்ளித் திரை படப்பிடிப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகின்றன.

‘திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருமாறு’ துணை முதல்வரிடம் ஆர்.கே செல்வமணி மனு!

இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வ மணி இன்று துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களில், சொந்த வீடு இல்லாத உறுப்பினர்களுக்கு குறைந்த வருவாய் பிரிவில் இலவச வீடுகள் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்து துணை முதல்வரிடம் அவர் மனு அளித்துள்ளார்.