தர்மபுரி-ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு- காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

 

தர்மபுரி-ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு- காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 5,500 கனஅடி வீதம் மட்டுமே உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தர்மபுரி-ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு- காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


இந்த நிலையில், ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், ஒகேனக்கல்லில் நோக்கி வரும் காவிரி ஆறு அமைந்துள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தர்மபுரி-ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு- காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


இதன் காரணமாக நேற்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. நேற்றிரவு மீண்டும் கனமழை பெய்ததால், நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கனமழையால் காவிரி ஆற்றில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.