புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு? – மத்திய அரசு அறிவுறுத்தல்!

 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு? – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு? – மத்திய அரசு அறிவுறுத்தல்!

உலகம் முழுவதும் நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது. வழக்கமாக 31ம் தேதியன்று இரவு கடற்கரை, தேவாலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடி கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பர். இந்த முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், பல மாநிலங்களில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும், புத்தாண்டு நள்ளிரவில் கடற்கரை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு? – மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதத்தின் வாயிலாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், சூழலை பொறுத்து இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த முயலுங்கள் என்றும் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் சூழலைப் பொருத்து கட்டுப்பாடு விதிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.