“கொரோனா குறையும் வரை… கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்”

 

“கொரோனா குறையும் வரை… கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்”

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பக் கட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பாதிப்பு சற்றும் குறையாததால் கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கியது. பின்னர், ஓரளவு பாதிப்பு குறைந்தால் மக்கள் நலன் கருதி படிப்படியாக தமிழக அரசு தளர்வுகளை அளித்தது.

“கொரோனா குறையும் வரை… கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்”

பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள, இ சேவை மையம், கட்டுமான அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்பட அரசு அனுமதி அளித்துவிட்டது. அதன் படி, இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கும் வந்துவிட்டன. தற்போது பாதிப்பு 14 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் சூழலில், அரசு கட்டுப்பாடுகளை பெருமளவு தளர்த்தியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனா குறையும் வரை… கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்”

இந்த நிலையில், மக்களின் நலன் கருதி கொரோனா குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெளிநாட்டு பயணிகளை பரிசோதித்து தனிமைப்படுத்தக் கோரிய ராம்குமார் ஆதித்தன் வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.