அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய எடப்பாடி!

 

அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய எடப்பாடி!

அதிமுகவில் முக்கியப் பொறுப்பு வகித்த சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அவரை கட்சியில் இருந்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் நீக்கிவிட்டார்கள். சிறையில் இருந்து விடுதலையான பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தாலும், அதிமுகவை இரட்டை தலைமையிடம் மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று அடுத்தடுத்து வெளியாகி வரும் ஆடியோக்கள். அதிமுக நிர்வாகிகளிடம் பேசி ஆடியோக்கள் வெளியிடுவது மூலமாக கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்துகிறார்.

அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய எடப்பாடி!

இதற்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய ஓபிஎஸ் – ஈபிஎஸ், அண்மையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். சசிகலாவுடன் பேசும் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவித்ததோடு, 15 பேரை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டனர். ஓபிஎஸ் – ஈபிஎஸ்ஸின் இந்த நடவடிக்கைக்கு அஞ்சாத சசிகலா, தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வருகிறார்.

அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய எடப்பாடி!

இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் ஈபிஎஸ் பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினராவதற்கு தகுதி இல்லாதவர் என விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் நிறைவேற்றப்பட்டது.