தமிழகத்தில் இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து?

 

தமிழகத்தில் இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து?

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. கொரோனா தொற்று ஒருவரின் உமிழ்நீரால் பரவுகிறது. கொரோனாவால் நடுத்தர வயதுடையவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து?

இந்நிலையில், தமிழகத்தில் பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகக் கூடுவதற்குத் தடை விதிப்பது, அத்தியாவசியமற்ற பெரும் வணிக நிறுவனங்களைத் திறக்க தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதுமானது. இரவு நேர ஊரடங்கால் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

தமிழகத்தில் இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து?

எனவே, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்தும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், கோழி மற்றும் இறைச்சிக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கவும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட இணைப்புச் சாலைகளில் டீக்கடை, ஹோட்டல், நான்கு சக்கர வாகனப் பழுது நீக்கும் கடைகள், பஞ்சர் கடைகளைத் திறக்கவும், இரவு நேரங்களில் 50 சதவீதப் பயணிகளுடன் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.