ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது!
Nov 4, 2020, 09:59 IST1604464193000
2018-ம் ஆண்டு நடந்த தற்கொலை வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்துள்ள மும்பை போலீசார் அர்னாப் கோஸ்வாமியின் வீட்டிற்குள் இன்று அதிரடியாக நுழைந்து அவரை கைது செய்தனர். தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், தன்னை தாக்கியதாகவும் அர்னாப் கோஸ்வாமி புகார் தெரிவித்துள்ளார்.