காலியாக கிடந்த முதல்வர் நிகழ்ச்சி! படம்பிடித்த செய்தியாளர் மீது தாக்குதல்

 

காலியாக கிடந்த முதல்வர் நிகழ்ச்சி! படம்பிடித்த செய்தியாளர் மீது தாக்குதல்

கரூர் வாங்கல், தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் உழவன் திருவிழா விவசாயிகள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

முதல்வர் வருகைக்கு முன்பாக வாழைத்தார்களை எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் செயல்களை செய்தியாளர் ஒருவர் புகைப்படம் எடுக்கும்போது, அதிமுக நிர்வாகி ஒருவர் அவரது செல்போனை பறித்து வைத்ததுடன், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தாக்கியுள்ளார்.

காலியாக கிடந்த முதல்வர் நிகழ்ச்சி! படம்பிடித்த செய்தியாளர் மீது தாக்குதல்

மேலும், நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படாததால், நின்று கொண்டிருந்த செய்தியாளர்கள் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களை வீசியுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும்போது இருக்கையை விட்டு எழுந்து சென்ற பொதுமக்களை மற்றொரு செய்தியாளர் வீடியோ எடுக்கும்போது கேமராவை பறித்துவிடுவோம் எனவும், இந்த இடத்தை விட்டு நகர முடியாது எனவும் மிரட்டும் தொணியில் எச்சரிக்கை விடுத்தனர். இவ்வாறு அங்கு நடைபெற்ற பல்வேறு முறையற்ற சம்பவங்களை கண்டித்து செய்தியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக நிகழ்ச்சியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், அவர்கள் ஏற்பாடு செய்த வாகனத்தை புறக்கணித்து பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்று சரக்கு வாகனத்தில் ஏறி சென்றனர்.