‘கட்டுப்பாடுகள் நீக்கம்’ லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

 

‘கட்டுப்பாடுகள் நீக்கம்’ லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

திவாலாகும் சூழலில் இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக நிதி நெருக்கடியை சந்தித்து வரும் லட்சுமி விலாஸ் வங்கி, 4 ஆண்டுகளுக்கும் முன் இருந்து அபார வளர்ச்சியை மீட்டெடுக்க பல முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால், எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை. அதனால், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

‘கட்டுப்பாடுகள் நீக்கம்’ லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அதாவது ஊழியர்கள் மாதத்திற்கு ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் அதற்கு மேல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, லட்சுமி விலாஸ் வங்கியை இணைத்துக் கொள்ள டிபிஎஸ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால், லட்சுமி விலாஸ் வங்கி கிளைகள் அனைத்தும் டிபிஎஸ் வங்கி கிளைகளாக மாற்றப்பட உள்ளன. இந்த நிலையில், லட்சுமி விலாஸ் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் முடிவுக்கு வந்துள்ளது.