10 வித நோய்களை விரட்டும் ‘”ரஜினி’யின் பாபா முத்திரை

 

10 வித நோய்களை விரட்டும் ‘”ரஜினி’யின் பாபா முத்திரை

“பாபா” படத்தில் ரஜினியின் முக்கிய ஸ்டைல்… இரண்டு விரல்களை உயர்த்தி மூன்று விரல்களை மடக்கிப் பிடிப்பதுதான்.. இதன் பெயர் அபான முத்திரை ஆகும். இது மிகவும் எளிதான முத்திரை என்பதோடு உடலுக்கு பல நண்மைகளும் செய்வதாகும்.

10 வித நோய்களை விரட்டும் ‘”ரஜினி’யின் பாபா முத்திரை


யோகாவில், ஆசனங்கள், பிரணாயாமம், தியானம், கிரியா மற்றும் முத்திரை ஆகிய ஐந்து பயிற்சிகள் மிக முக்கியமானவை. அவற்றில், ‘முத்திரை’ என்பது கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு பயிற்சிமுறை.இதில் முக்கியமான ஒரு முத்திரை ‘அபான வாயு’ முத்திரை ஆகும்..
உங்கள் மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு லேசாகத் தொடவேண்டும். மற்ற இருவிரல்களும் மேலே நீட்டியபடி இருக்க

10 வித நோய்களை விரட்டும் ‘”ரஜினி’யின் பாபா முத்திரை

வேண்டும்.இதுதான் அபான முத்திரை. இதனை உட்கார்ந்து கொண்டோ ,நின்று கொண்டோ செய்யலாம்.எவ்வளவு நேரமும் செய்யலாம். எங்கும் செய்யலாம்.
நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் ஏராளமான வேதியியல் பொருட்கள் கலந்துள்ளன.இதனால் உடலில் தேவையற்ற நச்சுகள் தங்கிவிடுகின்றன. இதனை மாத்திரை, மருந்துகள் இல்லாமல் எளிய வழியில் வெளியேற்ற இந்த அபான வாயு முத்திரை மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலில் தேங்கியுள்ள நச்சுககளால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அபான வாயு முத்திரை, வயிற்றில் உள்ள தேவையில்லாத நச்சுககளை வெளியேற்றி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில் கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையில் நிலம், நெருப்பு ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

10 வித நோய்களை விரட்டும் ‘”ரஜினி’யின் பாபா முத்திரை


வயிறு மற்றும் குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். மேலும் பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.
முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல்,

10 வித நோய்களை விரட்டும் ‘”ரஜினி’யின் பாபா முத்திரை

மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும். மூக்கடைப்பு தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.மூலம், சர்க்கரை நோய். இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இது. மனம் தொடர்பான பிரச்னைகளையும் இது சரிசெய்யும். கணையத்தில் உள்ள தேவையற்றக் கழிவுகளை நீக்கி இன்சுலின் உற்பத்திக்கு வழிவகுக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் இதனைச் செய்யக் கூடாது. இர.போஸ்