தேர்தல் முன்விரோதம்.. கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!

 

தேர்தல் முன்விரோதம்.. கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!

அரக்கோணம் அருகே உள்ள சோமனூர் காலனியில் கடந்த 6ம் தேதி தேர்தல் முன்விரோதம் காரணமாக அர்ஜுனன், சூர்யா என்ற இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். படுகாயமடைந்த 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியின் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரது மகன் சத்யா தலைமையில் இந்த கொலை அரங்கேறி இருக்கும் நிலையில், பாமகவினருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

தேர்தல் முன்விரோதம்.. கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!

தேர்தல் முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் கண்டனக் குரல்களை எழுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இன்று சென்னை உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

தேர்தல் முன்விரோதம்.. கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!

இந்த நிலையில், கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம் மற்றும் மாத உதவித்தொகையாக ரூ.5,000 வழங்க ஆணையிடப்பட்டது. அதன் படி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் நிவாரண காசோலையை அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார். தேர்தல் முன்விரோத வழக்கில் படுகாயமடைந்த நபர்களின் குடும்பத்தினருக்கும் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.