என்.எல்.சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

 

என்.எல்.சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று வழக்கம் போல ஊழியர்கள் பணிக்குத் திரும்பிய நிலையில், திடீரென 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. சமீபத்தில் 6 ஆவது யூனிட்டில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று 5 ஆவது யூனிட்டில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் தொடருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

என்.எல்.சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

இந்த நிலையில் என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களின் 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.