‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 

‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும்.

தலைமை ஆசிரியர் ,இரண்டு ஆசிரியர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் குழுவில் இடம் பெற்றிருப்பர்.

பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர் ,ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் குழுவில் இடம் பெற்றிருப்பர்.

‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிக்க பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்.

புகார்களைப் பதிவு செய்ய மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு தனியாக பதிவேட்டை பராமரிக்கும்.

வாய்மொழியாக உட்பட எம்முறையில் புகார் பெறப்பட்டாலும் பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும்.

ஒரு மாத காலத்தில் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.

‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

குறைகளை தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும்.

கிடைக்கப்பெறும் புகார்களை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும்.

பள்ளிகளை சார்ந்த அனைத்து அமைப்பினரும் போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்

‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுய தணிக்கை செய்வதை உறுதி செய்யவும் பள்ளி கல்வி துறையால் உருவாக்கப்பட்ட வழங்கப்படும்.

இணையவழி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்வதோடு அப்பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.