கணவன், மனைவியை இரும்பு கம்பியால் தாங்கிய உறவுகள்! மணப்பாறையை பதறவைக்கும் வீடியோ

 

கணவன், மனைவியை இரும்பு கம்பியால் தாங்கிய உறவுகள்! மணப்பாறையை பதறவைக்கும் வீடியோ

இடப் பிரச்னையால் வார்டு உறுப்பினரையும், அவரது மனைவியை இரும்பு கம்பியால் உறவினர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் மணப்பாறையில் நடந்துள்ளது.

கணவன், மனைவியை இரும்பு கம்பியால் தாங்கிய உறவுகள்! மணப்பாறையை பதறவைக்கும் வீடியோ

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்த மேட்டுப்பட்டி நேருஜி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மனைவி ஆலிஸ் நிர்மலா ராணி. ஆரோக்கியதாஸ், கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் 12-வது வார்டு உறுப்பினராக இருக்கிறார். ஆலிஸ் நிர்மலா ராணியின் குடும்பத்தினருக்கு அவரது வீட்டில் அருகே பூர்வீக காலிமனை இருக்கிறது. இந்த மனைக்கு உரிமை கோரியுள்ளார் உறவினர் சேசு. நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இருதரப்பிலும் அவ்வப்போது ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

கணவன், மனைவியை இரும்பு கம்பியால் தாங்கிய உறவுகள்! மணப்பாறையை பதறவைக்கும் வீடியோ

இது குறித்து மணப்பாறை காவல்நிலையத்திலும் புகார்கள் நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்தும் சமரச முயற்சிகள் தோல்வியில் முடிந்து வந்துள்ளது. இதனால் காவல்துறையினர், ” உங்கள் நிலப் பிரச்னையை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்ளுங்கள். இருதரப்பினரும் தகராறு செய்யக்கூடாது” என்று இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த 13ஆம் தேதி, மாலை ஆலிஸ் நிர்மலாராணி சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்திருந்த விறகுகளை சேசு தரப்பினர் எரித்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், சேசு தரப்பினர் நிர்மலாராணி, அவரது கணவரை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதில் ஆரோக்கியதாஸ் ரத்தவெள்ளத்தில் விழுந்துள்ளார். கணவர், தன் கண்முன்னே தாக்கப்படுவதைக் கண்டு அலறிய நிர்மலா ராணியையும் அவர்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

கணவன், மனைவியை இரும்பு கம்பியால் தாங்கிய உறவுகள்! மணப்பாறையை பதறவைக்கும் வீடியோ

இதில் அவரும் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்துள்ளார். இந்த காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உயிருக்கு போராடிய தம்பதியினரை அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.