ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவை ரத்து!

 

ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவை ரத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ரயில்களில் அதிகமாக பயணிகள், பயணிப்பார்கள் என்பதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே  3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது.

ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவை ரத்து!

இந்நிலையில் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பயணிகள், விரைவு மற்றும் புறநகர் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட விருப்பதாகவும், ஜூலை 1ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 12ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டு, கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படுவிருப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.