“குடிவெறியில் தலைக்கேறிய கொலை வெறி” – தாயின் தலையை துண்டாக்கிய மகன்

 

“குடிவெறியில் தலைக்கேறிய கொலை வெறி” – தாயின் தலையை துண்டாக்கிய மகன்

குடிக்க பணம் கொடுக்காத தாயின் தலையை வெட்டி வீசிய பாசக்கார மகனை போலீசார் தேடி வருகிறார்கள் .

“குடிவெறியில் தலைக்கேறிய கொலை வெறி” – தாயின் தலையை துண்டாக்கிய மகன்


தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் கொல்லப்பூரில் சந்திரம்மா என்ற 65 வயது பெண் குருமூர்த்தி மற்றும் ராமுடு என்ற இரண்டு மகன்களோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவரின் இளைய மகன் ராமுடு குடிப்பழக்கத்துக்கு அடிமையானார் .இதனால் அவரின் மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .அதனால் அவர் தன்னுடைய தாயிடம் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தொல்லை தந்தார் .ஆனால் அவரின் தாயார் அதற்கு மறுத்துள்ளார் .
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் தன்னுடைய தாயிடம் குடிக்க பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார் .அப்போது அந்த தாய் குடிக்க பணம் தர முடியாது என்று மறுத்துள்ளார் .இதனால் கடுமையான கோபமுற்ற அந்த மகன் தன்னுடைய தாயின் தலையை வெட்டினார் ..பிறகு வெட்டிய தலையை அவர் அங்குள்ள புதரில் வீசிவிட்டு சென்றார் .
பின்னர் சனிக்கிழமை காலை 7 மணியளவில், மூத்த மகன் குருமூர்த்தி வீட்டின் முன் பகுதிக்கு வந்து தாய் சந்திரம்மாவைச் பார்க்க வந்தார். அவர் வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​அவரது தாயின் தலை துண்டான உடல் அங்கே இரத்தவெள்ளத்தில் கிடப்பதைக் கவனித்து அதிர்ந்தார் ., பிறகு அவரின் தம்பி ராமுடு காணவில்லை என்றதும் அவர் மீது போலீசில் புகார் கூறினார்

போலீசார் உடனடியாக விசாரணைகளைத் தொடங்கினர். பிறகு கொலையான சந்திரம்மாவின் தலையை அவள் வீட்டின் நீர்நிலைக்கு அருகிலுள்ள புதரிலிருந்து மீட்டனர்.அவரின் மகன் ராமுடுவை கொலை வழக்கில் போலீசார் தேடி வருகின்றனர் .

“குடிவெறியில் தலைக்கேறிய கொலை வெறி” – தாயின் தலையை துண்டாக்கிய மகன்